WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – தமிழ் மொழியில் செயலி!
உலகளவில் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலியான வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் மக்களின் வசதிகளாக கூடுதல் அம்சங்கள் சில அறிமுகம் செய்து இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் செயலி:
தற்போது மக்களின் அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் நடைபெற தொடங்கி விட்டது. குறிப்பாக பட்டி தொட்டியில் இருக்கும் மக்கள் கூட வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அது ஒரு தகவல் பரிமாற்றம் செய்யும் செயலியாக மட்டும் இல்லாமல் பண பரிவர்த்தனை, வீடியோ கால் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது. அதனால் ஆன்லைன் மூலம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – வட்டி விகிதம் குறித்த முழு விவரங்கள் இதோ!
இந்த செயலியை பலர் பயன்படுத்தி வரும் நிலையில் அதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க சில சிறப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் படி பல்வேறு மொழிகளை கொண்ட இந்தியாவில் ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பிற மாநில மொழிகளில் வாட்ஸ் ஆப் செயலி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒரியா, உருது ஆகிய மொழிகளில் வாட்ஸ்ஆப் சேவையை இனி பயன்படுத்தலாம். அதனால் குறைவாக படித்த மக்கள் கூட இந்த செயலியின் சேவையாக பயன்படுத்தலாம். இந்த புதிய சேவையின் படி வாட்ஸ்ஆப் எப்போதும் போல சேவைகள் இருக்கும். ஆனால் அதன் தலைப்புகள் மாநில மொழிகளில் காட்டப்படும்.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆனால் நாம் எந்த மொழியின் செய்தி அனுப்புகிறோமோ, அதே மொழியில் தான் தகவல்கள் இருக்கும். இந்த வசதியை பெற வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். அதன் பின் வலது மேல் பகுதியியில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும் பின் செட்டிங்ஸ் – சாட்ஸ் – சூஸ் ஆப் லாங்வேஜ் சென்று அதில் உள்ள 10 மொழிகளில் தேவையான ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம். இந்த சேவை பல நாடுகளில் ஆண்ட்ராய்டு போன்களில் 60 மொழிகளிலும், ஐபோனில் 40 மொழிகளிலும் வாட்ஸ் ஆப் வழங்கி வருகிறது. வாட்ஸ் ஆப்பின் இந்த புதிய சேவை பலரது வரவேற்பை பெற்றுள்ளது.