தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை – கல்வி ஆணையம் அறிவிப்பு!!
சார்ஜா கல்வி ஆணையம் சார்பில், சார்ஜா பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சார்ஜா கல்வி ஆணையம்:
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்நிலையில் சார்ஜா பகுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
பள்ளிகளில் ஆய்வகங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
அதில் முதல் கட்டமாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசியை 2 முறை போட்டு கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த பரிசோதனை தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு தளர்வுகள் அளிக்க வேண்டும் – தமிழக அரசிடம் கோரிக்கை!!
கல்வி நிறுவனங்களில் உள்ள அலுவலர்கள் ஆணையத்திற்கு வருவதற்கு முன் 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். மேலும் தனியார் பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் விவரங்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்