தமிழகத்தில் ஆட்டோ பயண கட்டணம் உயர்வு? விரைவில் வெளியாக உள்ள ஷாக் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25 என்று அரசு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் ஆட்டோக்களுக்கான பயண கட்டணத்தை உயர்த்த குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. அதனால் விரைவில் தமிழகத்தில் ஆட்டோகளின் பயண கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது.
ஆட்டோ கட்டணம்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது. அத்துடன் பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆட்டோ ரிக்ஸா உள்ளிட்ட வாகனங்களில் கட்டண உயர்வுக்கு காரணமாகிறது. அத்துடன் தமிழகத்தில் தற்போது ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான பயண கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 14 & 15 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவிப்பு – அரசு அலுவலகங்கள் மூடல்!
மேலும் 80% ஆட்டோக்கள் ஓலா, உபர் உள்ளிட்ட தனியார் செயலி நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. அதனால் இந்த தனியார் செயலி நிறுவனங்கள் ஆட்டோக்களில் அதிகமான கமிஷனை பெறுகின்றனர். அதனாலும் ஆட்டோக்களில் அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு ‘டிஜிட்டல் மீட்டர்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தி குறைந்த அளவு கமிஷனை மட்டுமே வசூலிக்க உள்ளது. இந்த நிலையில் ஆட்டோக்களுக்கான மறுசீரமைத்த பயண கட்டணம் குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதன்படி ஆட்டோ கட்டணத்தை மறுவரையறை செய்ய அரசால் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இக்குழு ஆட்டோக்களின் பயண கட்டணம் உயர்வு குறித்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையின் முடிவில் ஆட்டோ கட்டணம் குறித்த பரிந்துரை போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.40 என்றும் கூடுதலான ஒவ்வொரு மீட்டருக்கும் ரூ.18 என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதி முடிவை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் விரைவில் ஆட்டோ கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.