ஜூன் 14 & 15 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவிப்பு – அரசு அலுவலகங்கள் மூடல்!
ஒடிசா மாநிலத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ராஜாவை முன்னிட்டு குர்தா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
இந்தியா பல்வேறு மதங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களால் நிறைந்த ஒரு பண்பாட்டு, பாரம்பரியம் மிக்க நாடாகும். இதனால் ஒவ்வொரு கலாசாரங்களை பின்பற்றும் மக்களுக்கும் விழாக்கள், கொண்டாட்டங்கள் என்பது வேறுபடும். அந்த வகையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மக்களால் குறிப்பாக பெண்களால் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ராஜா. இந்த விழா பெண்மையை கொண்டாடும் வகையிலும், பருவமழையை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 8000 பேருக்கு தொற்று உறுதி!
இந்த திருவிழா ஒடிசா மாநிலத்தில் உள்ள பெண்களால் கிட்டத்தட்ட 3 நாட்கள் வரைக்கும் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த விழாவின் இரண்டாவது நாள் சூரிய மாதமான மிதுனத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. அதாவது இந்த தினத்தில் இருந்து மழைக்காலம் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் வாரத்தில் ராஜா பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு ஒடிசாவின் குர்தா மாவட்ட நிர்வாகம், அனைத்து அரசு அலுவலகங்களும் பொது விடுமுறை அளித்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ராஜா பண்டிகையின் கடைசி நாளில் குர்தாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தொடர்பாக குர்தா மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, மாநில அரசின் அறிவிப்பின் கீழ் ராஜா பண்டிகை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும். இந்த தினங்களில் மாவட்டத்தின் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் கூடுதல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.