இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 8000 பேருக்கு தொற்று உறுதி!

0
இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பரவல் - ஒரே நாளில் 8000 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பரவல் - ஒரே நாளில் 8000 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 8000 பேருக்கு தொற்று உறுதி!

உலகம் முழுவதையும் தலை கீழாக மாற்றி உயிருக்காக எத வேண்டுமானாலும் இழக்க தயார் என்று சொல்லும் அளவுக்கு நாட்டில் பெரு மாற்றத்தையும், உயிர் சேதத்தையும் கொடுத்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு மீண்டும் உருவெடுத்து தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்துக்குள் நாட்டில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மீண்டும் உருவெடுக்கும் கொரோனா:

கடந்த 2020 மற்றும் 2021ல் நாட்டையே உலுக்கிய பேரழிவு நோய் தொற்று கொரோனா இந்த ஆண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அவ்விதமாக தற்போது இறப்பின் எண்ணிக்கை 5லட்சத்தையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியையும் கடந்து தீவிரமாகியுள்ளது. மேலும், இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்திற்குள் நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தலைமை செயலர் கடிதம்!

அதில் கூறியிருந்ததாவது, கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாட்டில் அதிகரித்து தற்போது மீண்டும் புதிதாக 7,584 பேரை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து 4,32,05,106 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நோய் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கூடுதல் உண்டாகும் விதமாக தற்போது புதிதாக 24 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,747 ஆக உயர்ந்துள்ளது.

அதுபோல பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் அநேகர் உள்ளனர். அதில் ஒரே நாளில் 3791 பேர் குணமடைந்து இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 4,26,44,092 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 36,267 பேருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு உத்தரவின் படி இந்தியாவில் 1,947,642,992 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 15,31,510 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Exams Daily Mobile App Download

மேலும், இதை குறித்த விவரங்களை விகித அடிப்படையிலும் கூறியுள்ளனர். அதாவது இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.71% ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளதாகவும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.08% ஆக குறைந்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!