சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு –  சாஹித் அப்ரிடி பதிவு!

0
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு -  சாஹித் அப்ரிடி பதிவு!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு -  சாஹித் அப்ரிடி பதிவு!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு –  சாஹித் அப்ரிடி பதிவு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெற இருப்பதாக பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் சாஹித் அப்ரிடி தற்போது பதிவினை வெளியிட்டு உள்ளார்.

சாஹித் அப்ரிடி:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர்  சாஹித் அப்ரிடி. கடந்த 1996ம் ஆண்டு முதல் சர்வதேச அரங்கில் கால் பதித்து விளையாடி வருகிறார். வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர் பந்தை அதிரடியாக அடித்து விளையாடும் திறன் கொண்டவர். மேலும் சுழற்பந்து வீச்சிலும் நல்ல திறமையுடன் வலிமையான ஆல் ரவுண்டராக பாகிஸ்தான் அணிக்கு தனது பங்களிப்பினை அளித்து வருகிறார்.

Tokyo Paralympics 2020: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் சிங்ராஜ்!

அவர் அறிமுகமான 2வது ஒருநாள் போட்டியிலேயே 37 பந்துகளில் சதமடித்து உலக சாதனை புரிந்தார். உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் 3 முறை அங்கம் வகித்துள்ளார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகள், 398 ஒருநாள் போட்டிகள் மற்றும் 99 T20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக 2016ம் ஆண்டு சர்வதேச போட்டியில் கலந்து கொண்டார்.

Tokyo Paralympics 2020 : வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு! இந்தியாவிற்கு இரட்டை பதக்கம்!

அதன் பின் அணியில் இடம் கிடைக்காததினால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் அடுத்த வருடம் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் பி.எஸ்.எல் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தற்போது முல்தான் அணிக்காக விளையாடி வரும் அவர் அனுமதி கிடைத்தால் குயிட்டா அணிக்காக விளையாட விரும்புவதாகவும் அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!