Tokyo Paralympics 2020: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் சிங்ராஜ்!
டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில், துப்பாக்கி சுடுதல் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் சிங்ராஜ் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
துப்பாக்கி சுடுதல்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் இருந்து டோக்கியோ சென்றுள்ள 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் போட்டிகளில் தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவியேற்பு – உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை!
ஒவ்வொரு நாளும் நடைபெற்று வரும் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை பெற தவறுவதில்லை. அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 30) ஒரே நாளில் 5 வீரர்கள் தங்கம், வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்திருந்தனர். இந்த சாதனைப் பயணம் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்று வரும் 8 ஆம் நாள் போட்டிகளிலும் தொடர்ந்துள்ளது. அதன் படி இன்று காலை துவங்கிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணியின் சார்பில் வீரர் சிங்ராஜ் கலந்து கொண்டார்
TN Job “FB Group” Join Now
பாராலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்ட அவர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் கலந்து கொள்ளும் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 31) மாலை 3 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளிலும் இந்தியாவுக்கான பதக்கம் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.