ச்ச மனுஷன் பாவம் யா.. பிக் பாஸில் நுழைந்த சீரியல் நடிகை ரச்சித்தா – முன்னாள் கணவர் வெளியிட்ட பதிவு!
விஜய் டிவியில் பிரமாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் ஆறாவது சீசனில் 20 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய நடிகை ரச்சித்தாவின் கணவர் தினேஷ், தனது மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
தமிழ் சின்னத்திரையில் பலரது மனதை கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த ஆண்டு ஆறாவது சீசன் தொடங்கப்பட்ட நிலையில், அதில் 20 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். அதில் பலர் புது முகங்களாக இருக்கும் நிலையில், ஒரு சில பழக்கப்பட்ட முகங்களும் இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் விஜய் டிவி சரவணன் மீனாட்சி புகழ் ரச்சித்தா மகாலட்சுமி. அவர் பிரிவோம் சந்திப்போம், நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் இது சொல்ல மறந்த கதை உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் தன்னுடன் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரையில் சிறந்த ஜோடிகளில் ஒருவராக இருந்த இவர்கள், சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டனர் என தகவல் வெளியாகியது. தற்போது ரச்சித்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது 3 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், அவருடைய கேரக்டரை சரியாக கணிக்க முடியவில்லை.
வளர்த்து விட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கழட்டி விட இதான் விஷயமா? காவ்யா விலக உண்மை காரணம்!
Exams Daily Mobile App Download
இருந்தாலும் ரச்சித்தா ரசிகர்கள் அவருக்கு ஆதரவை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ரச்சித்தாவின் முன்னாள் கணவர் நடிகர் தினேஷ், தன்னுடைய முன்னாள் மனைவி ரச்சித்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து, தனது சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய மனைவி வெற்றி பெற்று வர வேண்டும் என அவர் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் ரச்சித்தாவை விட்டு பிரிந்தாலும் அவர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் அந்த மனசு தான் கடவுள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்