இசை புயலுடன் கைகோர்த்த சன் டிவி பிரபல சீரியல் நடிகை கேப்ரியல்லா – ரசிகர்கள் உற்சாகம்!
தமிழை தனது மூச்சுக்கும் மேலாக நினைத்து சாதாரண பெண்ணாக இருந்த ஒருவர் டிக்டாக் செயலி மூலம் செலிபிரிட்டியாக முன்னேறியவர் நடிகை கேப்ரியல்லா. அவரது அதீத வளர்ச்சியில் ஒன்றாக தற்போது இசை புயலுடன் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் வெளியாகிய தகவல் கிடைத்துள்ளது. அதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
கேப்ரியல்லாவும் இசை புயலும்:
சிறுவயதிலிருந்தே திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டவர் கேப்ரியல்லா. இவர் குழந்தை பருவத்திலிருந்தே சிவாஜி, சாவித்திரி படங்களை அதிகம் விரும்பி பார்த்து அதுபோன்று நடிக்க வேண்டும் என்று அந்த கதாபாத்திரமாகவே தன்னையும் நினைத்து கொள்வாராம். இவரது நடிப்பை வெளிக்கொணரும் வகையிலும், தமிழ் மீது கொண்ட பற்றை வெளிப்படுத்தும் வகையிலும் அதற்கு முதல் படியாக டிக்டாக் செயலியை பயன்படுத்திக்கொண்டார். அதில் அவர் கடிதம் படிக்கும் வீடியோக்கள் அதிக அளவு பிரபலமாகியது. இதை தொடர்ந்து பல குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு அதற்கான அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
மேலும்,இவர் வெள்ளித்திரையில் கபாலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, காஞ்சனா 3 போன்ற படங்களில் சிறிய ரோலில் நடித்து பிறகு நயன்தாரா கதாநாயகியாக நடித்து வெளிவந்த ஐரா படத்தில் முக்கிய ரோல் கிடைத்தது. இந்த படத்தின் மூலம் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தர். தற்போது சன் டிவியில் சுந்தரி சீரியலில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஆஸ்கர் விருது வென்ற இசை புயல் ஏ.ஆர் ரஹ்மானின் “மூப்பில்லா தமிழே தாயே” என்ற இண்டிபென்டென்ட் ஆல்பம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு கேப்ரியல்லாவிற்கு கிடைத்தது. இதில் அவர் நடித்துள்ளதாக நினைக்காதீர்கள் அவர் இதில் இசை புயலுடன் சேர்ந்து பாடியுள்ள சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், அமினா ரபிக், ரக்ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார், நகுல் அப்யங்கர் ஆகிய மொத்தம் 11 பேர்களில் கேப்ரியல்லாவும் ஒருவர் ஆவர்.
இந்த ஆல்பம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியானதை தொடர்ந்து கேப்ரியல்லா “மூப்பில்லா தமிழே தாயே” ஆல்பத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி மற்றும் இது எனக்கு கிடைத்த வரமாக கருதுகிறேன், ஏ.ஆர் ரஹ்மான் சாருக்கு மிகவும் நன்றி… கனவு மாறி இருக்கு!” என்று அவரது இன்ஸ்டா பேஜில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். இதுகுறித்து முன்னதாகவே கேப்ரியல்லா செல்லஸ், இசை புயலுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து “நான் கனவில் கூட நினைத்து பார்க்காத நிஜம் நடந்தது” என்றும் “இது எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு.. இறைவனுக்கு நன்றி!” என்றும் கேப்ரியல்லா அவரது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.