கதிருக்கு வேறு திருமணம் செய்து வைக்கும் குடும்பத்தினர் – அதிரடி திருப்பங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!
ஏற்கனவே தனக்கு குழந்தை பிறக்காது என்பதை தெரிந்து மனஉளைச்சலில் இருந்து வரும் முல்லைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது கதிருக்கு வேறொரு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர்கள் முடிவு செய்யும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயத்தை மருத்துவர் கதிரிடம் கூறுகிறது. ஆனால் கதிர் இந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் மறைத்து விடுகிறார். முல்லையிடமும் உனக்கு கண்டிப்பாக குழந்தை பிறகும் என கதிர் கூறி முல்லையின் மனதை தேற்றி வைத்திருந்தார். இருந்தாலும் தனக்கு குழந்தை பிறக்காதோ என்கிற கேள்வி முல்லையின் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது.
சொன்னதை செய்து காட்டிய சஞ்சீவ், ஆல்யா மானசா ஜோடி – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
சந்தேகத்தை தீர்க்க மருத்துவர் கொடுத்த ரிபோர்ட்டை முல்லை பார்த்து தனக்கு குழந்தை பிறக்காது என்பது குறித்தான அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்கிறார். இதுக்கு மேலும் கதிரின் மனைவியாக வாழ்ந்து என்ன பயன் என நினைத்து வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். கதிரும் உனக்கு நான் இருக்கிறேன் என முல்லையை சமாதானப்படுத்தி மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வருகிறார். ஆனால் முல்லை குடும்பத்தினரின் முகத்தை கூட பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு பிறகு குழந்தை பிறக்க சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள் என எதிர் பார்த்த சமயத்தில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. மீனாவின் அப்பாவான ஜனார்தனன் முல்லைக்கு குழந்தை பிறக்காது என்பதை ஏளனமாக பேசுகிறார். இதனால் கதிருக்கு வேறொரு திருமணம் செய்து வைக்கலாம் என ஐடியா கூறுகிறார். குடும்பத்தினருக்கும் ஜனார்தனன் கூறியது சரியாக தான் தோன்றுகிறது. கதிருக்கு வேறொரு திருமணம் செய்துவைப்பது போலவும், என்ன செய்வதென்று தெரியாமல் முல்லை விழித்து கொண்டிருப்பது போலவும் கதையம்சம் வேறு கோணத்தில் பயணிக்க உள்ளது.