தமிழகத்தில் இன்று மட்டும் 1,556 பேருக்கு கொரோனா உறுதி; பலி எண்ணிக்கை 18 – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தினசரி பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மட்டும் 1,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு குறைந்து வந்த காரணத்தால் தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நிலைமை சீரடைந்து வருவதால் மீண்டும் பள்ளிகள் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தினசரி பாதிப்பு முன்னதாக குறைந்திருந்த நிலையில், தற்போது அதிகரித்து வருகிறது.
சென்னை முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை – சாலை எங்கும் வெள்ளக்காடு!
தமிழக சுகாதாரத்துறை இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மட்டும் 1,556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,24,234 பேர் ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றினால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவறை தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,038 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகம் முழுவதும் இன்று மட்டும், 1,564 பேர் தொற்று பதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இதுவரையில் 25,72,942 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,55,088 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,32,72,865 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 16,256 பேர் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் அதிக பட்சமாக கோவையில் இன்று ஒரு நாளில் மட்டும் 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் புதிதாக 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.