சென்னை முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை – சாலை எங்கும் வெள்ளக்காடு!
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போல் இன்று சென்னை நகர் முழுவதும் தற்போது கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதித்துள்ளது.
கனமழை:
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெப்பம் குறைந்து குளுமையாக உள்ளது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவ காற்று வீசி வருகிறது. இதனால் வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக முன்னதாக அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, இன்று மாலை முதல் சென்னையின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் – அனைத்துக் கட்சி கூட்டம்!
சென்னையில் கோயம்பேடு, அண்ணா நகர், மதுரவாயல், போரூர், வளசரவாக்கம், வடபழனி, விருகம்பாக்கத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், மணலி, செங்குன்றம், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மாலை நேரத்தில் நகர் முழுவதும் கனமழை பெய்துள்ளதால் சாலை எங்கும் மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டுகளில் சென்னையில் வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்து வருவதாக ஆய்வு அறிக்கைகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.