தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று; இன்று 1,682 பேருக்கு உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 1,682 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக பல சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், பல முறைகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக சுகாதாரத்துறை தினசரி பதிப்பின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மட்டும் தமிழகத்தில் மேலும் 1,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,50,370 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
IPL 2021, DC vs SRH LIVE Updates: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி!
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 35,400 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 06 பேரும், அரசு மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்று தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 1,627 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 25,97,943 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 17,027 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இன்று மட்டும் 1,51,802 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை, தமிழகத்தில் 4,57,56,365 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 194 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,48,289 – பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சற்று குறைந்திருந்த தினசரி பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.