‘கண்ணான கண்ணே’ மீராவை அழவைத்த கௌதம் – வைரல் வீடியோ!
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் நாயகி மீராவை ஷூட்டிங் ஸ்பாட்டில் அழ வைத்த பிருத்வி, இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட் கலவரம்:
வெள்ளித்திரையில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே முன்னொரு காலத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் தற்போதைய கால கட்டத்தில் சினிமா நடிகர்களை விட அதிக புகழை சம்பாதிக்கும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் உள்ளனர். அதிக புகழ் மற்றும் ரசிகர்கள் உடையவர்களுக்கு என்று தனியாக பல ஆர்மிகள் உள்ளது. சமூக வலைத்தளங்களில் இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அதிக ரசிகர்கள் மற்றும் புகழை அடைந்த நடிகைகளில் ஒருவர் கண்ணான கண்ணே சீரியல் மீரா.
சன்டிவியில் ஹிட் சீரியல் வரிசையில் ரோஜா விற்கு அடுத்த இடத்தில உள்ளது கண்ணான கண்ணே சீரியல். இதில் மற்ற கதைகளில் இருந்து மாறுபட்ட கதையம்சம் உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவு பெருகி வருகிறது. சீரியலின் நாயகி மற்றும் நாயகன் வேடத்தில் யுவா- மீரா நடிக்கின்றனர். மீராவின் அப்பாவாக பிருத்விராஜ் நடிக்கிறார். அப்பா மற்றும் மகளுக்கு இடையில் உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது. மீரா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை நிமிஷிகா கண்ணான கண்ணே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒப்பனை செய்து கொண்டிருக்கும் பொது நடந்த கலாட்டா வீடியோவாக செம வைரலாக பரவி வருகிறது.
அதன்படி, மீரா அடுத்த ஷாட்டுக்காக மும்முரமாக ரெடி ஆகி கொண்டிருக்கிறார். மேக்கப் டச்அப் செய்து கொண்டிருக்கும் பொது, அவருக்கு அப்பா ரோலில் நடிக்கும் பப்லு பிருத்விராஜ் பாம்பு போல் சத்தத்தை கொடுத்து கொண்டே மீராவின் காலை பிடிக்கிறார். இதனால் பயத்தில் மீரா கத்தி அலறி பயத்தில் அங்கேயே உட்கார்ந்து விடுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி ஆஃஃப் கேமிராவில் கூட ஏன் கெளதம் அப்பா இப்படி மீராவை அழ வைக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.