செப்.18 ( இன்று) திருச்சியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருச்சி மணப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின்தடை நீக்கப்படும்.
மின்தடை:
தமிழகத்தில் அதிகப்படியான மின்தடை ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது ஆங்காங்கே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து திருச்சி மணப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் செப்டம்பர் 18ம் தேதியான இன்று காலை 9:45 முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. இதனால், திருச்சி மணப்பாறை துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மணப்பாறை அனைத்து பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செப் 27ம் தேதி வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய பந்த் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!
மின் நிலைய பராமரிப்பு பணியால் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குப்பட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங் கைக்குறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிப் பட்டி, ஆண்டவர் கோயில், கள்ளிப்பட்டி, முத்தபுடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதி யகாலனி, பழையகாலனி, மணப்பாறைப் பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய் கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகப்பட்டி, இராயம்பட்டி, வலையப்பட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் மணப்பாறையில் உள்ள பெரியபட்டி, களத்துப்பட்டி, கொட்டப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம், பூசாரிப்பட்டி, கரும்புலிப்பட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், ராயம்பட்டி, பண்ணாங்கொம்பு, கருப்பகோயில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம் பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, ஆமணக் கம்பட்டி, பாலகருதம்பட்டி, பொய்கைப் பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.