அண்ணா பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு – பிப்ரவரி மாத செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் அந்நாளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வை ஒத்தி வைக்க உள்ளதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு:
தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள், 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதியதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பரவல் மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவ மழைக்காலம் என்பதாலும் தேர்தலை நடத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அதனால் தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு ரத்து – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்து கொண்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொது தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதனால் ஆலோசனைகளை மேற்கொண்டு பல்வேறு தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ரூ.2 லட்சம் அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை? முழு விபரம் இதோ!
இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு நீக்கப்பட்டு அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. அத்துடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குபதிவு பிப்ரவரி மாதம் 19ம் தேதி அன்று நடைபெறும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அந்த தேதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இத்தேர்வுகளை மார்ச் 5,6,9,11ம் தேதிக்கு அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியுள்ளது.