மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு ரத்து – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

0
மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு ரத்து - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு ரத்து - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு ரத்து – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

தற்போது ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரசு அலுவலகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட சில செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

புதிய கட்டுப்பாடுகள்

தற்போது கொரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு ரத்து உள்ளிட்ட சில கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) நடத்திய கூட்டத்திற்குப் பிறகு, வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்கவும், ஒற்றைப்படை இரட்டைப்படை அடிப்படையில் கடைகளைத் திறக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ரூ.2 லட்சம் அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை? முழு விபரம் இதோ!

இருப்பினும், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை குறித்து அரசாங்க உத்தரவில் எதுவும் குறிப்பிடப்படாததால், அவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) சில புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில்,

  • அனைத்து அரசு அலுவலகங்களும் நிலை 1 மற்றும் அதற்கு மேல் உள்ள பணியாளர்களுடன் 100% செயல்படும்.
  • மற்ற ஊழியர்கள் 50% வரை அலுவலகத்திற்கு வருகை தரலாம்.
  • மீதமுள்ள 50% பேர் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள்.
  • மத்திய அரசு மற்றும் டெல்லி அரசின் அத்தியாவசிய துறைகள் முழு பலத்துடன் செயல்படும்.
  • சந்தைகள், சந்தை வளாகங்கள் மற்றும் மால்களில் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகளைக் கையாளும் கடைகள் அனுமதிக்கப்படும்.
  • இந்தக் கடைகள் மற்றும் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் திறக்க அனுமதிக்கப்படும்.
  • சினிமா அரங்குகள், மல்டிபிளக்ஸ்கள், கொரோனா பொருத்தமான நடத்தையை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் இருக்கை திறனில் 50% வரை அனுமதிக்கப்படும்.
  • தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள் 50% இருக்கை திறனில் அனுமதிக்கப்படும்.
  • பார்கள் அனைத்தும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை 50% இருக்கைகளுடன் அனுமதிக்கப்படும்.
  • திருமண நிகழ்வுகள் 200 நபர்களுடன், இடத்தின் 50% திறன் வரை அனுமதிக்கப்படும்.
  • இறுதிச் சடங்கு தொடர்பான கூட்டங்களில் 100 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
  • வார இறுதி ஊரடங்கு உத்தரவு இருக்காது.
  • என்றாலும் தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!