மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ரூ.2 லட்சம் அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை? முழு விபரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை விரைவில் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
DA உயர்வு:
கடந்த 18 மாதங்களாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதான அகவிலைப்படி (DA) தொகை 2021 அக்டோபர் மாதத்தில் 31% ஆக உயர்த்தப்பட்டது. இந்த தொகை எப்போது ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இது குறித்த உறுதியான தகவல்கள் அரசு தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை. இப்போது, 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) தொகையை திரும்ப அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிப்ரவரியில் தொடங்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் – BCCI திட்டம்! அருண் துமால் பேட்டி!
அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத் தொகை குறித்து அமைச்சரவை அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என நெருங்கிய அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது. இது தவிர அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத் தொகையை மொத்தமாக வழங்கவும் அமைச்சரவை கவுன்சில் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது நடந்தால், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள், சுமார் 2 லட்சம் ரூபாய் வரை சலுகையை பெறுவார்கள்.
மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு – பிப்ரவரி 15 வரை விடுமுறை அறிவிப்பு!
இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க, மத்திய நிதி அமைச்சகம், பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை, செலவினத் துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் JCM பேச்சு வார்த்தை நடத்த உள்ளது. இக்கூட்டத்தில் அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை மொத்தமாக வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது லெவல்-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,000 வரை இருக்கும். அதே நேரத்தில், லெவல்-13 ஊழியர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரையிலான DA நிலுவைத் தொகை கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது