ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் ஷபானா பற்றி தெரியாத உண்மைகள் – ரசிகர்கள் ஷாக்!
ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி சிறந்த நடிகையாக இருக்கும் ஷபானா பற்றி தெரியாத தகவல்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
செம்பருத்தி ஷபானா:
தமிழ் சின்னத்திரையில் பல முன்னணி சீரியல் நடிகைகள் பிரபலமாக இருக்கின்றனர். சீரியல்களில் நடித்து அதன் மூலம் ரசிகர் மன்றம் அமைக்கும் அளவிற்கு அவர் மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுகின்றனர். மேலும் புது முக நடிகையாக அறிமுகம் ஆகி தனது நடிப்பு திறமையால் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் தாம் செம்பருத்தி சீரியல் ஷபானா, அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி போட்டியாளர்கள் யார்? இன்று மாலை 6 மணிக்கு! ப்ரோமோ ரிலீஸ்!
அவர் பிறந்தது எல்லாம் மும்பையில், முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் முதலில் அவர் நடிக்க பல எதிர்ப்புகள் வந்ததாம், அதன் பின் அவருடைய நடிப்பு திறமையை காட்ட வேண்டும் என்பதால், BBA வரை படித்து விட்டு சின்னத்திரைக்கு வந்தார். அவர் மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு “விஜயதசமி” என்ற சீரியல் மூலமாக நடிப்புத்துறைக்கு வந்தார். பின் 2017 ஆம் ஆண்டு பிரபல சேனல் ஆன ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இருந்து விலகும் ஆல்யா மானசா – ப்ரோமோ ரிலீஸ்!
அதில் அவருடைய அழகான நடிப்பு பிடித்து போய் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது. அதன் பின் அவர் கடந்த செப்டம்பர் மாதம் தன்னுடைய காதலர் ஆர்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆர்யன் விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறார். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக வதந்திகள் பரவியது. ஆனால் அது எல்லாம் உண்மை இல்லை என ஷபானா விளக்கம் அளித்து இருக்கிறார்.