விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இருந்து விலகும் ஆல்யா மானசா – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா தற்போது சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதிலாக செம்பருத்தி ஷபானா நடிக்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில் அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் சரவணன் சமையல் போட்டியில் கலந்து கொண்ட பணத்தை ஆதி எப்படியாவது திருட வேண்டும் என நினைக்கிறார். அவரும் திருடி விட பணத்தை காணாமல் குடும்பத்தினர் அனைவரும் இருக்கின்றனர். சந்தியா அந்த பணத்தை கண்டுபிடிப்பாரா என்பதே இனி வரும் எபிசோடுகளில் காட்ட இருக்கின்றனர். இந்நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆல்யா சீரியலில் இருந்து விலக இருக்கிறார்.
விஜய் டிவி சீரியலில் நடிக்க தொடங்கிய Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து!
அவர் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாது, இந்த சீரியலில் சந்தியா IPS ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். அதனால் தைரியமான பெண் சந்தியா என்பதை காட்ட பல ஆக்சன் காட்சிகள் வைக்கப்படும். அதில் ஆல்யாவால் தொடர்ந்து நடிக்க முடியாது. ஆனால் இது குறித்து ஆல்யா கூறுகையில், சீரியலில் தொடர்ந்து நான் சந்தியாவாக நடிப்பேன் என்னுடைய பிரசவ காலத்தில் சீரியலில் சில மாற்றங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கும் ஜூலி – ஹோட்டல் அறையில் தனிமை, ரசிகர்கள் உற்சாகம்!
ஆனால் தற்போது அவர் சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதிலாக செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து வரும் ஷபானா களமிறங்கி இருப்பதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் சந்தியாவாக ஷபானா நடித்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆல்யா பிரசவ காதலத்தில் கதை எப்படி கொண்டு செல்லப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.