விஜய் டிவி சீரியலில் நடிக்க தொடங்கிய Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நம்ம வீட்டுப் பொண்ணு” சீரியலில் புதிதாக களமிறங்கியுள்ள Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி பிரபலம். அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ரசிகர்கள் வாழ்த்து:
விஜய் தொலைக்காட்சியில் அதிகமான ரியாலிட்டி சோக்கல் இருந்தாலும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியை ம.க.பா ஆனந்த், அர்ச்சனா, மணிமேகலை ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். மற்ற சீசனை விட 3வது சீசனுக்கு அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது.
ஜீ தமிழ் “அன்பே சிவம்” சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!
சீசன் 3 நிகழ்ச்சியில் சரத் – கிருத்திகா ஜோடி டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்றனர். இந்த டைட்டில் வின்னர் ஜோடிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த வகையில் 3வது சீசனில் மிகவும் கியூட்டான ஜோடியாக இருந்தவர்கள் ஜாக்-ரோஷினி தம்பதி. அவர்கள் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து மக்களின் பேராதரவை பெற்று வந்தார்கள்.ரோஷினி ஒரு பின்னணி பாடகி மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் ஜாக்-ரோஷினி Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி முடித்தவுடன் யூடியூப் பக்கம் ஒன்றை தொடங்கி அதில் பல்வேறு கலாட்டாக்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வைரலாகி வருகிறது என்னவென்றால், ஜாக் “நம்ம வீட்டுப் பொண்ணு” சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளதாகவும், அந்த ப்ரோமோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.