ஜீ தமிழ் “அன்பே சிவம்” சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!
பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுடன் போட்டி போட்டு மாறுபட்ட கதையுடன் ஜீ தமிழில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் முன்னணி சீரியல்களில் ஒன்றான அன்பே சிவம் சீரியலில் கதாநாயகி ரக்ஷா தற்போது விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை ரக்ஷா:
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் TRPயில் போட்டி போடும் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் மாறுபட்ட கதை கொண்ட முன்னணி சீரியல் தான் “அன்பே சிவம்”. இந்தக் கதையைப் பொறுத்த வரை, நல்ல சிவம் நேர்மையான வழக்கறிஞராக இருக்கிறார். அன்புச் செல்வி சிறந்த ஃபேஷன் டிசைனராக இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளும் இருவரும், ஒருகட்டத்தில் தங்களுக்கு இடையே எழும் முரண்பாடு காராணமாக விவாகரத்து பெற்றுக் கொள்கின்றனர்.
பிக் பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கும் ஜூலி – ஹோட்டல் அறையில் தனிமை, ரசிகர்கள் உற்சாகம்!
அவர்களுக்கு ஓவியா மற்றும் இனியா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இருவரில் ஓவியா அன்புச் செல்வியிடமும், இனியா நல்ல சிவத்திடமும் வளர்கின்றனர். அவர்களின் தாய் மற்றும் தந்தையை சந்திக்கும்போது, மீண்டும் புரிதல் ஏற்பட்டு இணைகிறார்களா? என்பதே சீரியலின் முக்கிய கதையாக இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகி அன்புசெல்வியாக நடித்து வருபவர் ரக்ஷா. அவர் தற்போது சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? புதிய படத்தில் கமிட்!
ஆனால் இது குறித்து சேனல் தரப்பில் இருந்து தகவல் வெளியே வந்ததும், அது குறித்து பேசாமல்இருப்பது நல்லது என இது குறித்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ரக்ஷா அந்த கதாபாத்திரத்தில் பொருந்தி இருக்கும் நிலையில் அவரை சீரியலில் இருந்து மாற்ற வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.