‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்! ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் ஆர்யன் மற்றும் நடிகை ஷபானா இருவரின் திருமணம் முதல் அவர்களை தொடர்ந்து வரும் விவாகரத்து வதந்திகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது ஆர்யன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
விவாகரத்து வதந்தி:
சமீப காலமாக வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை நடிகர், நடிகைகளின் விவாகரத்து செய்திகள் பரபரப்பாக சென்று வருகிறது. ரசிகர்கள் அவர்களின் ஃபேவரிட் நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர். இதனால் நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் போடும் சின்ன சின்ன சாதாரண பதிவுகள் கூட மிகவும் பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் செய்தி ஊடகங்களில் தெரிவிக்காத விஷயங்களை கூட சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்கள் தெரிந்து கொள்கின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலருக்கும் வரிசையாக திருமணம் நடந்து வந்தது. அதில், அதிக கவனம் பெற்றவர்கள் ஜீ தமிழ் செம்பருத்தி நடிகை ஷபானா மற்றும் விஜய் டிவியின் பாக்கியலக்ஷ்மி சீரியல் நடிகர் ஆர்யன். இவர்கள் காதலிக்க தொடங்கிய சில மாதங்களிலேயே திருமணம் செய்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும் இவர்களின் ரசிகர்கள் இவர்களின் திடீர் திருமண அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி இவர்களின் திருமண நிகழ்வுகள் அனைத்தையும் கொண்டாட தொடங்கி விட்டனர்.
தவறு செய்ததை ஒப்புக் கொள்ள சொல்லும் பாரதி, கண்ணம்மாவின் பதில் என்ன? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
ஆனால் திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும், விவாகரத்து செய்யப்போவதாகவும் தொடர்ந்து பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை பற்றி இவர்கள் இருவரும் சமூக ஊடகங்களில் இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. இந்த சமயத்தில் ஆர்யன் தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமண சமயத்தில் மாலை மாற்றி தாலி கட்டிய தருணத்தை பதிவிட்டு அந்த வீடியோவில் ‘ ஐ லவ் யூ பொண்டாட்டி’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது அதிக அளவில் வைரலாகி வருகிறது.