தவறு செய்ததை ஒப்புக் கொள்ள சொல்லும் பாரதி, கண்ணம்மாவின் பதில் என்ன? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
தவறு செய்ததை ஒப்புக் கொள்ள சொல்லும் பாரதி, கண்ணம்மாவின் பதில் என்ன? இன்றைய
தவறு செய்ததை ஒப்புக் கொள்ள சொல்லும் பாரதி, கண்ணம்மாவின் பதில் என்ன? இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
தவறு செய்ததை ஒப்புக் கொள்ள சொல்லும் பாரதி, கண்ணம்மாவின் பதில் என்ன? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மாவுடன் முழு மனதுடன் சேர்ந்து வாழ இருக்கிறார். ஆனால் கண்ணம்மா நான் தவறு செய்து தான் குழந்தை பெற்றுக் கொண்டேன் என்ற உண்மையை ஒப்புக் கொள்ள சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மாவின் அன்பை புரிந்து கொண்டேன் என சொல்கிறார். வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டும் என்றால் இத்தனை வருஷம் உன்னை பிரிந்து இருந்தது தவறு என உணருகிறேன். ஆனால் எனக்கு நீ ஒன்று செய்ய வேண்டும். நீ ஆமாம் என சொல்ல போகும் ஒரு வார்த்தையால் எல்லாம் மாறிவிடும் என பாரதி சொல்கிறார். சுற்றி இருக்கும் குடும்பத்தினர் பாரதி பேசுவதை நினைத்து சந்தோஷப்படுகின்றனர். நான் உன்னுடன் வாழ்ந்தால் தான் சந்தோசமாக இருப்பேன். நான் இதை தனியாக பேசினால் என்னை நடிக்கிறேன் என சொல்வாய் அதனால் தான் எல்லார் முன்னடியும் இதை சொல்கிறேன்.

இதை எல்லாம் செய்தால் நாளைக்கே நீ லட்சுமியுடன் இங்கே வந்துரலாம், ஹேமா ஏற்கனவே உன் மீது பாசமாக இருக்கிறாள் அதனால் அவளுக்கும் அம்மா கிடைத்துவிடும். அதெல்லாம் நீ சொல்ல போற வார்த்தையில் தான் இருக்கிறது. அது என்ன என்றால் ஆமாம் நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன். இன்னொருத்தனின் பழக்கத்தால் தான் எனக்கு குழந்தை வந்தது என்ற உண்மையை நீ ஒப்புக் கொள்ள வேண்டும் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நான் உன்னிடம் எதுவும் கேட்கவில்லை. நீ ஒப்புக் கொண்டால் போதும் என சொல்கிறார்.

அப்போது கண்ணம்மா எதுவும் பேசாமல் இருக்க 9 வருஷத்திற்கு முன்னாள் நீ தான் வீட்டை விட்டு சென்றாய் நீ அப்போது உன் மீது நியாயம் இருப்பதை நிரூபித்து இருக்க வேண்டும் என சொல்ல, கண்ணம்மா எதுவும் பேசாமல் கை எடுத்து குடும்பிடுகிறார். எல்லாரும் கண்ணம்மா ஒப்புக் கொள்ள போகிறாளா என நினைக்க, அவர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுகிறார். பின் சௌந்தர்யா பாரதியிடம் எதற்கு இப்படி செய்தாய் ஒவ்வொரு வார்த்தையும் விஷம் போல கொட்டிவிட்டாய் என சத்தம் போடுகிறார். கண்ணம்மா மீது சந்தேகம் இருந்தால் ஏன் இங்கே வந்தாய் என கேட்கிறார்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

உன்னை நினைத்தாலே அசிங்கமாக இருக்கிறது என சௌந்தர்யா சொல்ல, நான் நடிக்கவில்லை அவளுடன் சேர்ந்து வாழ நான் தயாராக இருக்கேன். ஆனால் அவள் செய்த தவறை ஒப்புக் கொள்ள வேண்டும். நான் எவ்வளவு பெரிய தவறை ஒப்புக் கொள்ள தயாராக இருக்கேன் ஆனால் என்னை நீங்க தப்பானவனாக நினைக்கிறீர்கள். உடனே அகில் நீ இத்தனை நாட்களாக எத்தனை ஆப்ரேசன் செய்திருக்கிறாய் அதில் இறந்தவரை நீ தான் கொன்றாய் என சொன்னால் நீ ஒப்புக் கொள்வாயா அது போல தான் என அகில் சத்தம் போடுகிறார்.

நீ நிதானமாக தான் யோசித்து இந்த முடிவை எடுத்து இருக்கேன். ஆனால் யாரும் என்னை புரிந்து கொள்ளவில்லை, அதை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது என சொல்கிறார். நான் என் மனதில் இருப்பதை எல்லாம் நேர்மையாக கேட்டிருக்கேன் என சொல்ல, அகில் ஆமாம் நேர்மை உன் மனதில் இருந்தால் அண்ணி மீது இப்படி கேள்வி இருந்தால் ஏன் அவர்களை தனியாக கூப்பிட்டு பேசி இருக்கலாமே இப்படி எல்லார் முன்னாடியும் ஏன் அசிங்கப்படுத்த வேண்டும் என கேட்கிறார். தவறு செய்தவர் தான் வருத்தப்பட வேண்டும் என பாரதி சொல்ல, ஆமாம் உன்னை நம்பி உன்னுடன் வாழ வந்தாலே அவள் வருத்தப்பட தான் வேண்டும் என சொல்ல இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!