குழந்தைக்காக மருத்துவமனை செல்லும் கதிர் முல்லை, சந்தேகத்துடன் பார்க்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை மருத்துவமனைக்கு செல்ல தனம் சீக்கிரமாக கிளம்ப சொல்கிறார். பின் மருத்துவமனைக்கு செல்ல அங்கே டெஸ்ட் எழுதி கொடுக்கிறார்கள். முல்லை அதெல்லாம் நினைத்து பதட்டத்தில் இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், காலையில் தனம் சீக்கிரமாக எழுந்து முல்லைக்கு தேவையானதை எடுத்து வைக்கிறார். அப்போது முல்லை வர காலையில் சீக்கிரமாக மருத்துவமனைக்கு சென்றால் தான் சீக்கிரமாக பார்க்க முடியும் என சொல்ல, நேற்றே டோக்கன் போட்டு வைத்துவிட்டார் என சொல்கிறார். பின் முல்லை பதட்டமாக இருப்பதை பார்த்து தனம் எதுவும் பிரச்சனை இருக்காது. அந்த மருத்துவமனைக்கு சென்றாலே சிகிச்சை எதுவும் பார்க்காமல் பலர் குழந்தை பெற்று இருக்கிறார்கள். நான் கூட 15 வருஷம் கழித்து தான் மாசமாக இருந்தேன்.
மூளை வளர்ச்சி இருக்காது அப்படி எல்லாம் பயமுறுத்தினார்கள். ஆனால் அதெல்லாம் இல்லாமல் நல்லபடியாக சுக பிரசவத்தில் குழந்தை பெற்று இருக்கிறேன் அது போல உனக்கும் சீக்கரம் குழந்தை பிறக்கும் என பேசிக் கொண்டிருக்க ஐஸ்வர்யா அதை பார்த்துவிடுகிறார். முல்லை அக்கா குழந்தை இல்லை என வருத்தப்படுகிறார் போல என நினைத்துக் கொண்டு, அவர் நல்ல அக்கா கடவுளே எந்த பிரச்சனையும் இருக்க கூடாது என நினைக்கிறார்.
பின் மூர்த்தியும் தனமும் காத்துக் கொண்டிருக்க முல்லையும் கதிரும் வருகிறார்கள். தனம் அத்தையிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு கிளம்புங்கள் என சொல்ல, கதிரும் முல்லையும் ஆசிர்வாதம் வாங்குகின்றனர். அப்போது மூர்த்தி ஒரே மாதிரி பிரச்சனை நம்ம வீட்டிற்கு வராது என சொல்ல, கதிரிடம் காசு எடுத்து கொடுக்க சொல்கிறார்.தனம் நிறைய காசு கொண்டு வந்து கொடுக்க, கதிர் எதற்கு இவ்வளவு காசு என கேட்கிறார். ஸ்கேன் எல்லாம் எடுக்க தேவைப்படும் தான என சொல்ல முல்லை அதெல்லாம் எடுப்பார்களா என பயத்துடன் கேட்கிறார்.
தவறு செய்ததை ஒப்புக் கொள்ள சொல்லும் பாரதி, கண்ணம்மாவின் பதில் என்ன? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
அதன் பின் இருவரும் மருத்துவமனையில் டாக்டரை பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லை என்ன சொல்வார்களோ என பதட்டத்துடன் இருக்க, கதிர் பயப்படாமல் இரு என சொல்கிறார். பின் டாக்டரை பார்க்க உள்ளே போக அங்கே டாக்டர் கணவன் மனைவி எப்படி இருப்பீங்க என கேட்கிறார். முதலில் நாங்க சண்டை போடுவோம் ஆனால் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என சொல்ல, குழந்தை வராததற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரத்தில் காரணம் இல்லாமல் கூட இருக்கலாம். அதனால் எதுவும் சொல்ல முடியாது என சொல்லி சில டெஸ்ட் எழுதி கொடுக்கிறார்.
அதை எல்லாம் எடுத்துவிட்டு கதிர் முல்லை வர, நாளைக்கு தான் ரிப்போர்ட் வரும் என சொல்கிறார்கள். அதனால் வெளியே வந்து முல்லை பதட்டத்துடன் இருக்கிறார். முல்லையை கதிர் சமாதானம் செய்ய, தனம் போன் செய்கிறார். கதிர் நாளைக்கு தான் ரிப்போர்ட் வருவதாக சொல்ல, முல்லையை அம்மா வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்கிறார். கதிர் சரி என சொல்ல, அங்கே விட்டுவிட்டு வந்துவிடாதே என சொல்கிறார். அப்போது மூர்த்திக்கு போன் செய்து கதிர் முல்லை வீட்டிற்கு சென்று இருக்கிறான் கடைக்கு நேரமாக தான் வருவான் என சொல்ல அதை மீனா கேட்டு விடுகிறார். அவர் ஏன் எதற்கு என பல கேள்விகளை கேட்க தனம் அவரை சமாளிக்க கஷ்டப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.