ராதிகா கோபி திருமணம் செய்ய இருப்பதை கேட்டு அதிர்ச்சி அடையும் மயூரா, கோபியின் அடுத்த திட்டம் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் பாக்கியாவிடம் பணத்தை கொடுக்க, பாக்கியா கோவமாக செழியனிடம் பேசுகிறார். பின் எழில் அமிர்தாவிடம் தனது காதலை சொல்கிறார். பின் ராதிகாவின் அம்மா சொந்தக்காரர்களிடம் கோபி பற்றி சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் ஜெனி பேச்சை கேட்டுவிட்டு பாக்கியாவிடம் பணத்தை கொண்டு வந்து கொடுக்கிறார். இந்த பணத்தை வைத்துக் கொள் நான் இலவசமாக சாப்பிடுவதாக நினைக்க வேண்டாம் என சொல்ல, பாக்கியா கோபத்துடன் பணத்தை எடுக்க சொல்கிறார், நான் உன்னிடம் பணம் கேட்டேனா என கேட்க, நான் கொடுக்கும் போது வேண்டாம் என சொல்ல வேண்டியது பின் பணம் கொடுக்கவில்லை என பின்னால் பேச வேண்டியது என சொல்கிறார். உடனே ஈஸ்வரி பணம் கொடுத்து சாப்பிட இது என்ன ஹோட்டலா என கேட்கிறார். பணத்தை கையில் கொடுத்து அவரை போக சொல்கிறார்.
உடனே செழியன் அதை வாங்கி கொண்டு செல்ல, ஜெனி பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். செல்வி அந்த தம்பி தான் நிறைய சம்பாரிக்கிறதே அப்பறம் வாங்க வேண்டியது தான என கேட்கிறார். மறுபக்கம் எழில் அமிர்தா அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க பொங்கல் பண்டிகை பற்றி பேசுகின்றனர். பின் எழில் கிளம்ப அமிர்தாவிடம் பாட்டி சொன்னதை எதுவும் நினைத்து கொள்ளாதீர்கள் என சொல்கிறார்.அப்படி ஒரு பொண்ணே இல்லை பாட்டி சும்மா சொன்னார்கள் என சொல்ல, அமிர்தா சிரிக்கிறார்.
ராதிகா வீட்டில் வேலை செய்து கொண்டிருக்க, கடைக்கு போக வேண்டும் என அவரது அம்மாவிடம் சொல்கிறார். அப்போது கோபி வர மயூராவை அழைத்துக் கொண்டு கோபி போகிறார். பின் ராதிகாவின் சொந்தக்காரர் வர, அவரிடம் ராதிகாவின் அம்மா கோபியை அறிமுகம் செய்து வைக்கிறார். இவர் தான் ராதிகாவை திருமணம் செய்ய போவதாக சொல்ல, அதை மயூரா கேட்டு அதிர்ச்சி அடைகிறார். ராஜேஷ் என்னாச்சு என கேட்க விவாகரத்து வாங்க போகிறோம் என சொல்கிறார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனவரா என கேட்க, ஆமாம் இவரும் விவாகரத்து பெற்றவர் என சொல்கிறார், அதை எல்லாம் மயூரா கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் கோபி கிளம்ப காரில் ராதிகா அம்மா பேசியதை நினைத்து பார்க்கிறார். கோபி வீட்டிற்கு வர பாக்கியா காபி தரவா என கேட்கிறார். அதெல்லாம் வேண்டாம் என கோபி சொல்ல இனியா வந்துவிட்டாளா என கேட்க, பாக்கியா கார் சாவியை எடுத்துவிட்டு செல்கிறார்.சாப்பாடு பை எடுக்க போவதாக பாக்கியா கிளம்ப காரில் எதையோ பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.