தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுமா? என்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
மதுக்கடை:
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மூன்றாம் அலை கொரோனா பரவல் தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 23,000 ஐ நெருங்கி விட்டது. இதனையடுத்து முதல்வர் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கும் அமல்படுத்தியுள்ளார். இந்த நிலையில் மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. கொரோனா தொற்றை ஒழிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகள் அனைத்தும் பயன் அளிக்க கட்டாயம் மதுக்கடைகளை மூட வேண்டும்.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஏனெனில் மது பிரியர்கள் மது கடைகளில் தொற்று பரவி இந்த நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக முந்தி கொண்டு மது வாங்க முற்படுகின்றனர். இதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் கொரோனா கட்டுக்குள் வரும் வரை மது கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 16ம் தேதி ஊரடங்கை முன்னிட்டும் நேற்று தைப்பூசம் போன்ற விழாக்களை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
Post Office தினசரி ரூ.95 முதலீடு, ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் இன்சூரன்ஸ் திட்டம்!
அதன் பிறகு நேற்று முன் தினம் முதல் வழக்கம் போல மதுக்கடைகள் செயல்பட்டது. இந்த நிலையில் கோவை மாவட்டம் சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் கடைகளை தொற்று குறையும் வரை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு தமிழக முதல்வர் ஆலோசித்து இது குறித்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிப்பார் என்று விளக்கம் அளித்துள்ளார்.