Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முக்கிய அறிவிப்பு – தேசிய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்!
இந்திய தபால் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 26 லட்சத்து 3 ஆயிரத்து 872 கணக்குகள் திறக்கப்பட்டு தேசிய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
செல்வ மகள் சேமிப்பு:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களுக்கான பல்வேறு பயன் தரக்கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இலவச கல்விக்கான உதவித்தொகை தொடக்கப்பள்ளி முதல் உயர் படிப்பு வரை வழங்கப்படுகிறது. மேலும் கற்றலை தாண்டி தொழில் செய்ய விரும்பும் மகளிருக்கு குறைந்த வட்டி அரசு நிதி நிறுவனங்கள் மூலம் சுய தொழில்புரிய கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்கும் சிறந்த நலத்திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் அஞ்சல் துறை வழங்க கூடிய செல்வ மகள் சேமிப்பு திட்டம். இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கான எதிர்காலத்தை சிறப்பாக்கும் வகையில் உள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணிமாறுதல் கலந்தாய்வு விதிமுறை!
10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையின் பேரில் இத்திட்டத்தை தொடங்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் 2 பெண் குழந்தைக்கு இந்த திட்டத்தை தொடங்கலாம். செல்வ மகள் சேமிப்பு கணக்கை தொடங்க ரூ.250 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கலாம். நீங்கள் சேமிக்கும் தொகைக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் 50% தொகையை முதிர்வு காலத்தில் குழந்தையின் மேற்படிப்புக்காக பெற்றுக் கொள்ளலாம். அல்லது திருமணம் ஆகும் போதோ மேலும் 21 வயது நிறைவு பெறும் போது கூட பெறலாம்.
தமிழகத்தில் நாளை (ஜன.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த திட்டம் குறைந்த சேமிப்பில் அதிக லாபத்தை தரக்கூடியதாக உள்ளதால் ஏராளமான பெண் குழந்தையின் பெற்றோர்கள் இச்செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கி வருகின்றனர். கடந்த 2018 முதல் 2021ம் ஆண்டு வரை, 1.42 கோடிக்கும் அதிகமான மக்கள் இச்சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளனர். அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் மட்டும் சுமார் 29,12,632 பேர் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கி இந்திய அளவில் அம்மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்ததாக தமிழகத்தில் 26,03,872 செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் திறக்கப்பட்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.