தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணிமாறுதல் கலந்தாய்வு விதிமுறை!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜன.19ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கலந்தாய்வு நடத்துவதற்கான விதிமுறைகள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
பொது மாறுதல் கலந்தாய்வு:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் பொதுமாறுதல் மற்றும் விருப்பமாறுதலுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனவரி மாதம் அரசு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் வரும் ஜன.19ம் தேதி பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜன.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இத்தகைய பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்துவதற்கான விதிமுறைகள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பமும், தகுதியும் உள்ள ஆசிரியர்கள் வரும் ஜன.7ம் தேதிக்குள் இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல் வரும் ஜன.10ம் தேதி வெளியிடப்படும். அந்த பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை மாற்றும் பணிகள் மறுநாள் நடைபெறும். அதனை தொடர்ந்து மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் வரும் ஜன.13ம் தேதி வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 6 முதல் 21ம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!
அதன்பின் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இளநிலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு வரும் ஜன.19 முதல் பிப்.18 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறையில் ஆசிரியர் மாறுதலுக்கு மாறுதல் பெற்ற பள்ளியில் குறைந்தது ஒரு வருடம் பணியாற்றினாலே மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் பணி மாறுதல் பெற்ற பள்ளியில் குறைந்தது 3 வருடங்கள் பணியாற்றினால் மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும். தற்போது இவ்வாறு மாற்றப்பட்டுள்ள விதிமுறை ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.