தமிழகத்தில் நாளை (ஜன.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ராஜபாளையம் நல்லமநாயக்கன்பட்டி உபமின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (06.01.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என ராஜபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
நாளை மின்தடை:
தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகளை மின்வாரியம் தவறாமல் மேற்கொண்டு வருவதால் மின்தடை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் மின் கசிவு காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த விபத்துகள் மற்றும் மின் தடைகளை தவிர்ப்பதற்கும் பராமரிப்பு பணிகளை மின்வாரியம் மேற்கொள்கிறது.
ஜனவரி 6 முதல் 21ம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பிற்கும் சில மணி நேரம் மின்தடை ஏற்படும். இந்த மின்தடை குறித்து அந்தந்த மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சார்பில் முன்னதாகவே அறிவிக்கப்படும். இந்நிலையில் ராஜபாளையம் நல்லமநாயக்கன்பட்டி உப மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதனால் சில மணி நேரம் மின் இணைப்பு நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும்.
தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கன் பெறாதோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஆகவே சோழபுரம், தேசிகாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், காமாட்சிபுரம், ஆசிலாபுரம், தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ராஜபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார். இந்த வகையில் மின் பராமரிப்பு பணிகள் துணை மின் நிலையத்தில் முடிவடைந்த உடன் மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்.