தமிழகத்தில் ரூ.50,000க்கு அதிகமாக கொண்டு சென்றால் பறிமுதல் – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பறக்கும் படை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் எச்சரிக்கை:
தமிழகத்தில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 9 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தலும், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுக தேர்தலும் நடத்தப்படுகிறது.
IPL திருவிழா 2021: புள்ளி பட்டியலில் யாரு டாப்? ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப்!
9 மாவட்டங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் பறக்கும் படை அமைக்க மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. அதேபோல் சரியான ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் நடைபெறுவதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.