தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களை அளித்து வரும் நிலையில், தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மேலும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்கள்:
சில வருடங்களுக்கு முன்பு வரை 90% அளவிலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு தான் அதிக முன்னுரிமை கொடுத்தனர். இதனால் தனியார் பள்ளிகளில் ஏற்பட்ட அதிக மாணவர் சேர்க்கையின் விளைவால் அங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டில் இருந்து கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிகளில் பலர் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு – மாலை நிலவரம்!
அரசு எடுத்துள்ள கணக்கெடுப்பின் படி, நடப்பு ஆண்டில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 3.40 லட்சம் பேர் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அந்த மாணவர்களை அரசு பள்ளிகளில் தக்க வைத்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. மேலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது, கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை மந்தைவெளியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல தகவல்களை அளித்துள்ளார்.
தமிழகத்தில் 2 அரசு பள்ளிகள் மூடல் – மாணவர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி!
அதன்படி, நீட் தேர்வில் விலக்கு பெற தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. மாணவர்கள் தங்களின் பிறந்தநாளில் மரக்கன்று நடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மேலும், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி தரப்படும் என்று கூறினார். இது குறித்து முன்னதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியாக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.