தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – CEO செயல்முறைகள்!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதன் விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே திருத்திக் கொள்ளலாம் என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்து உள்ளார்.
இரண்டாம் திருப்புதல் தேர்வுகள்:
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் திருப்புதல் தேர்வுகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே முதல் கட்ட திருப்புதல் தேர்வுகள் பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வுகள் வருகின்ற 26 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5ஆம் தேதி முடிய உள்ளது. முதல்கட்ட திருப்புதல் தேர்வுகள் நடைபெற்ற போது, வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் லீக் ஆனதால் பெரிதாக பரபரப்பு ஏற்பட்டது. அதனால் மிகவும் கவனத்துடன் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடந்து முடிந்து உள்ளது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் கவனத்திற்கு – மார்ச் 26 முகாம்!
இந்த நிலையில் வரும் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வுகள் நடக்க உள்ளன. மீண்டும் திருப்புதல் தேர்வுகள் வினாத்தாள் லீக் ஆகிவிடும் என்ற பயத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் இருந்து வந்தனர். ஆனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள்கள் முன்னரே வெளியே வராமல் தடுக்க தற்போது மூன்று வகையில் வினாத்தாள் தயாரிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. அப்படி ஒரு வேலை வினாத்தாள் லீக் ஆனால் அடுத்த வினாத்தாளை வெளியிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்து வருகிறது பள்ளிக்கல்வித்துறை.
மேலும் அவ்வாறு நடந்து முடிந்த அந்த தேர்வுகளின் விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் வைத்து திருத்தி மாணவர்களுக்கு தர வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்து உள்ளார். மேலும் இன்னும் இரண்டு நாட்களில் திருப்புதல் தேர்வுகள் நடைபெற இருப்பதால், மாணவர்கள் மும்முரமாக படித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதன் பின்னர் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளும் நடைபெற உள்ளது.