தமிழகத்தில் நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு – விடுமுறைகள் ஓவர்!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் முடிந்து தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டது. விடுமுறைகள் அனைத்தும் இன்றோடு முடிவடைந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகம் முழுவதும் பள்ளிகள் அனைத்தும் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு நடப்பாண்டில் தான் வழக்கம் போல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் முன்னதாக மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் எழுத்து முறையில் வேண்டாம் என்றும், மாணவர்கள் தேர்வினால் அச்சப்படும் சூழல் ஏற்படும் என்றும் கருத்துக்கள் வந்தது. ஆனால் மறுபுறம் மாணவர்கள் தேர்விற்கான சூழலுக்கு ஆயத்தமாக வேண்டும் என்றும் அதிக கோரிக்கைகள் எழுந்து வந்தது.
இதனால் இறுதியாக மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டு அக்டோபர் 1ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறைகள் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. மேலும், அக்டோபர் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதை செய்யும் வாரிசுகளுக்கு சொத்தில் சல்லி பைசா கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Exams Daily Mobile App Download
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள், அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளின் அனைத்து வகுப்பினருக்கும் அக்டோபர் 10ம் தேதி ஆகிய நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. நாளை முதல் மாணவர்களுக்கு வகுப்புகள் வழக்கம் போல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப நிலை பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்