இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அனுமதி!
பஞ்சாப் மாநிலத்தில் (02.08.2021) இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் மீண்டும் பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
மீண்டும் பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. தொடர்ந்து உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸ் பரவல் அச்சத்தால் அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 40,134 பேருக்கு கொரோனா உறுதி – 422 பேர் உயிரிழப்பு!
அதே சமயம் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கமும் சற்று குறைந்து வருவதால் மாநில அரசுகள் மருத்துவ குழுக்களுடன் கலந்தாலோசித்து ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நேரத்தில் மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறையும் ஆலோசித்து வருகிறது. ஒரு சில மாநிலங்களில் முதற்கட்டமாக மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மற்ற மாநிலங்களை தொடர்ந்து பஞ்சாபில் (02.08.2021) இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை ஊரடங்கை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது. கொரோனா பரவல் முழுமையாக குறையாத நிலையில் ஆசிரியர்களும் மாணவர்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளின் நோய்த்தடுப்பு வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் பஞ்சாப் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.