இந்தியாவில் ஒரே நாளில் 40,134 பேருக்கு கொரோனா உறுதி – 422 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 422 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க கொரோனா தடுப்பூசிகள் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தும் பணிகள் அனைத்து மாநிலங்களிலும் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை நாட்டில் 47,02,98,596 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொடர் ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. அதனை தொடர்ந்து மக்களும் அரசுக்கு தனது ஒத்துழைப்பை வழங்கி வந்தனர். இதன் காரணமாக கடந்த மாதம் எதிர்பார்த்த அளவு தொற்று பரவல் குறைந்தது.
e-RUPI ‘எதிர்கால டிஜிட்டல் கட்டணத் தீர்வு’ – பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பு!
இது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருக்கிறது . இந்த நேரத்தில் அடுத்த தாக்குதலாக கடந்த 2 வாரங்களாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 40,134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,16,95,958 ஆக உயர்ந்துள்ளது. மாநில அரசுகள் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி முடிக்காமல் தளர்வுகளை அறிவித்ததால் தான் தொற்று அதிகரிக்கிறது என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இது கொரோனாவின் மூன்றாம் அலை என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதனால் தடுப்பூசிகளை 100 சதவீதம் செலுத்தி முடிக்க வேண்டும் என உலக சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 422 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 4,24,773 ஆக உள்ளது. மேலும் ஒரே நாளில் புதிதாக 36,946 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அதனால் நாட்டில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,08,57,467 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளில் 4,13,718 கொரோனா நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.