ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – ஜூலை 1ம் தேதி மீண்டும் திறப்பு! மாநில அரசு அறிவிப்பு!
நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வருகிற ஜூன் 13 ல் பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக அரசு சொல்லப் பட்டு வந்த நிலையில் ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி நேரங்களையும் கல்வித்துறை அமைச்சர் மாற்றியமைத்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
நாட்டில் கோவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுகட்டுவதற்காக அனைத்து மாநில அரசும் கோடை விடுமுறையைக் குறைக்க முடிவு செய்தது. ஆனால் வெயிலின் தாக்கம் குழந்தைகளை பாதிக்கும் என்ற ஒரே காரணத்துக்காக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பதை குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு – விரைவில் அரசாணை வெளியீடு!
ஏனென்றால் மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது ஹரியானா அரசு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 1 முதல் கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. அதாவது ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை மூடப்படும். புதிய கல்வி அமர்வு ஜூலை 1 முதல் தொடங்க பட வேண்டும் என்பதை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், கடும் வெயிலுக்கு மத்தியில் பள்ளி நேரங்களையும் ஹரியானா மாநில கல்வித்துறை அமைச்சர் மாற்றியுள்ளார். திருத்தப்பட்ட அட்டவணையின்படி, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி நேரங்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், கோடை விடுமுறையின் போது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.