ஜனவரி 18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசின் உத்தரவை எதிர்த்து பெற்றோர்கள் கோரிக்கை!
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் சங்கராந்தி விடுமுறையைத் தொடர்ந்து நாளை (ஜன.18) முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிருப்தியான சூழல் உருவாகி இருக்கிறது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 3ம் அலைத்தொற்றின் தாக்கத்திற்கு மத்தியில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ், பள்ளிகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி 17 அன்று முடிவடைந்த சங்கராந்தி விடுமுறைக்குப் பிறகு அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை மீண்டும் திறக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – ஜன.24ம் தேதி நேர்காணல்!
அந்த வகையில் சங்கராந்தி விடுமுறையைத் தொடர்ந்து பள்ளிகளைத் திறக்க ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வழக்குகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளை திறக்கும் நடவடிக்கைக்கு பல மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசுக்கு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
இப்போது பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான உத்தரவை அரசு வெளியிடும் போது, ஆந்திர கல்வி அமைச்சர் சுரேஷ் குமார், மாணவர்களின் கல்வி இழப்பை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தக் கல்வியாண்டில் ஏற்கனவே 150 நாட்கள் முடிந்துவிட்டது. மீதமுள்ள வகுப்புகளை நேரடி முறையில் தொடர நாங்கள் உத்தேசித்துள்ளோம். கடந்த ஆண்டுகளை போல ஆல் பாஸ் அணுகுமுறை தொடர்ந்தால் எதிர்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
தமிழக அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
மேலும், 90% ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதால், தகுதியான மக்கள் தொகையில் பல குழந்தைகள் முதல் டோஸ் பெற்றுள்ளனர் என்றும் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். நீண்ட காலத்திற்கு பள்ளிகளை மூடுவதில் அர்த்தமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆந்திரா மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கும் மாநில அரசின் முடிவவுக்கு எதிராக பல பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே நேரத்தில் விடுமுறையை நீட்டித்து, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்குமாறும் பெற்றோர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறிப்பாக ஜனவரி 18 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று தேர்வு செய்துள்ளனர். அதுவும், அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் உள்ள பகுதிகளில் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்க மறுத்துள்ளனர். அந்த வகையில் குறைவான வருகை, பெற்றோரின் கவலைகள் காரணமாக மீண்டும் பள்ளி மூடுதலை அரசாங்கம் நீட்டிக்கக்கூடும் என்று தெரிகிறது.