தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – ஜன.24ம் தேதி நேர்காணல்!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - ஜன.24ம் தேதி நேர்காணல்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - ஜன.24ம் தேதி நேர்காணல்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – ஜன.24ம் தேதி நேர்காணல்!

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு வேலை:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அரசு மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இத்தகைய வேலைவாய்ப்புகள் கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மற்றொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

ஆனால் இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சான்றொப்பமிட்டு நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். அதனால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இது குறித்த கூடுதல் விபரங்களை பின்வருமாறு காணலாம்.

பணி: DEO, Lab Technician, Social Worker, District Consultant, Psychologist/Counselor

காலியிடங்கள்: 05

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் CMLT/ DMLT/ 12 th/ MBBS/ BDS/ Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.13,000 முதல் ரூ.35,000 வரை என வேலைக்கு தகுந்தாற்போல் சம்பளம் மாறுபடும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

நேர்காணல் நடைபெறும் தேதி: 24.01.2022

நேர்காணல் நடைபெறும் இடம்: துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், S.F. No.147, பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர், 641602

மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது என்பதால் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. அதனால் பணியில் சேருபவர்களுக்கு சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் பெறப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கீழ்வரும் இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை இணைத்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/01/2022011046.pdf என்ற இணையதள முகவரியில் உள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!