தமிழக அரசு வேலைவாய்ப்பு – 5 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !
தமிழக அரசில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 19.01.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பதவிக்கு 15 மற்றும் 16 என மொத்தம் 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் குத்தாலம் வட்டத்தினைச் சேர்ந்தவர்களாகவும், குத்தாலம் வட்டத்திலேயே நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
04.07.2021 அன்றைய நிலையில் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் (இருந்ததியினர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர். (முஸ்லீம்) ஆகியோருக்கு 37 வயதும், இதர வகுப்பினருக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரம், கல்வித்தகுதி சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ். மற்றும் வேலை வாய்ப்பக பதிவு விபரம் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பதாரரின் சுய முகவரி ((Self Addressed Postal Cover) லொக் எழுதப்பட்ட ௬.25/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட 25*10 செ.மீ அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் முலமாகவோ எதிர்வரும் 19.01.2022 மாலை 5.45 மணிக்குள் குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்கத்தக்க வகையில் அனுப்பி வைத்திட வேண்டும் எனவும் அதற்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.