அனைத்து பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு – 7 மணிக்கு திறக்க உத்தரவு! மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்!
இந்தியாவில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. அதனால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் கவனத்திற்கு
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கப்படவில்லை. இதையடுத்து தற்போது பள்ளிகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன. இதையடுத்து தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் இன்னும் பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அத்துடன் சில மாநிலங்களில் பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால் கோடை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் எடுக்க வேண்டியது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (மே 13) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதில் குறிப்பிட்டுள்ளதாவது, கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் வெயில் வெளுத்து வாங்குகிறது. அதனால் பள்ளிகளை முன்கூட்டியே தொடங்கி மதியத்துக்குள் முடிக்கலாம். அத்துடன் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகளை காலை 7 மணி முதல் திறந்து மதியத்துக்குள் முடிக்கலாம். அத்துடன் மாணவர்களை சூரிய ஒளியில் நேரடியாக விளையாடவோ, நடமாடவோ அனுமதிக்கக்கூடாது என்றும் மாணவர்கள் அவரவர் தண்ணீர் பாட்டில்களை வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Exams Daily Mobile App Download
இதையடுத்து மாணவர்களுக்கு வெப்பத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அத்துடன் பள்ளிகளில் உப்பு, சர்க்கரை கரைசல் வைத்திருக்க வேண்டும். மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை எடுத்து வர அனுமதி வழங்க வேண்டும். தேர்வு மையங்களிலும் சுத்தமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மின்விசிறிகள் செயல்படுவதையும் மற்றும் அனைத்து வகுப்பறைகளும் நல்ல காற்றோட்ட அமைப்புடன் இருப்பதையும் சரிபார்க்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை மத்திய அரசு தொகுத்து வழங்கியுள்ளது