தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை அரைநாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு – மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!
ரமலான் நோன்பு தொடங்கப்பட்டுள்ளதால் சென்னையில் செயல்பட்டு வரும் உருது பள்ளிகள் ஏப்ரல் 30ம் தேதி வரை அரை நாள் மட்டுமே செயல்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரை நாள் பள்ளிகள்:
இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்று ரமலான் நோன்பு இஸ்லாமிய காலண்டரில் 9-வது மாதம் ரமலான் ஆகும். ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து 30 நாட்கள் நோன்பு கடைபிடிப்பர். அதிகாலை 4 மணி அளவில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், பருகாமலும் இருப்பார்கள். பிறகு கடவுளை தொழுது விட்டு இரவு உணவை உட்கொள்வர். மேலும் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ரமலான் மாதத்தை நபிகள் நாயகம் ‘ஷஹ்ரே அஜீம்’ என்றும் ‘ஷஹ்ரே முபாரக்’ அதாவது ‘கண்ணியம் நிறைந்த அல்லது அருள் வளம் நிறைந்த மாதம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
இந்த மாதத்தில் ஜகாத் எனப்படும் தானம் கொடுப்பது என்பது ஒவ்வொரு இஸ்லாமியரும் செய்யக்கூடிய கடமையாகும். அதிகாலை பஜர் நேர தொழுகைக்கு முன்பாக சஹர் உணவு உண்ணப்படுகிறது. அதனை தொடர்ந்து சஹர் உணவு நேரம் முடிவடைந்ததும் நோன்பு நோற்பவர்கள் தண்ணீர் கூட அருந்துவதில்லை. தற்போது நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செயல்பட்டு வரும் உருது பள்ளிகள் வரும் 30ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நோன்பை சிறப்பாக கடைபிடிக்கும் வகையிலும், உரிய நேரத்தில் தொழுகவும் ஏதுவாக இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து சென்னை உருது பள்ளித் தலைமையாசிரியா்களும் மாநகராட்சிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ஏப்.3 முதல் ரமலான் நோன்பு தொடங்குவதால் அனைத்து சென்னை உருது பள்ளிகளும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஐந்து பாடவேளைகள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது