தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசின் முடிவு என்ன!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தால் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மீண்டும் மூடப்படும் என்று தகவல் பரவி வருகிறது. அதனால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.
மீண்டும் கொரோனா
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று மிகவும் பரவி இருந்தது. அதிலும் நமது மாநிலமான தமிழகம் இந்த கொரோனா தோற்றால் மிகவும் பாதிக்கப்பட்டது.மேலும் கொரோனா பரவல் காரணமாக மாநிலங்களில் பெரிதும் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் நேரடி வகுப்புகள் இல்லாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 10, 11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளும் நடைபெற உள்ளது.
பவர் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மே 2 இறுதி நாள்..!
இந்த நிலையில் தற்போது பொது தேர்வுகள் எழுத உள்ள மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பொது தேர்வுகள் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்த கல்வி ஆண்டுக்கான (2022 – 2023) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. அதன்படி, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24 ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சென்னை மற்றும் இன்னும் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் மீண்டும் ஊரடங்கு மற்றும் பள்ளிகளும் மூடப்படும் என்று தகவல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்களும், மாணவர்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.