மீண்டும் அதிகரிக்கும் கொரோனாவால் மூடப்படும் பள்ளிகள்? அரசு முக்கிய அறிவிப்பு!

0
மீண்டும் அதிகரிக்கும் கொரோனாவால் மூடப்படும் பள்ளிகள்? அரசு முக்கிய அறிவிப்பு!
மீண்டும் அதிகரிக்கும் கொரோனாவால் மூடப்படும் பள்ளிகள்? அரசு முக்கிய அறிவிப்பு!
மீண்டும் அதிகரிக்கும் கொரோனாவால் மூடப்படும் பள்ளிகள்? அரசு முக்கிய அறிவிப்பு!

நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா பரவல் தாறுமாறாக அதிகரித்துவரும் காரணத்தினால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமோ என மக்கள் பீதியில் உள்ளனர். இதற்கு தற்போது டெல்லியின் துணை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பரவல்:

உலகம் முழுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்தது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அரசும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது, முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். மேலும், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அரசு தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. ஆனால், தற்போது சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. மேலும், இந்தியாவிலும் கொரோனா பரவல் தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் மட்டுமே 24 மணி நேரத்தில் 949 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். இதில் நாட்டின் தலைநகரான டெல்லியில் மட்டுமே 325 கொரோனா பதிவு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி 0.57 சதவீதமாக இருந்த கொரோனா தொற்று தற்போது 2.39 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பள்ளி மாணவர்களும் பலர் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். இதனால், மீண்டும் பள்ளிகள் மூடப்படுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து டெல்லியின் துணை முதலமைச்சரான மணிஷ் சிசோடியா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இருந்தால் மட்டுமே பள்ளிகளை மூடுவது குறித்து யோசிக்கப்படும். தற்போதைக்கு பள்ளிகளை மூடும் அவசியம் இல்லை என கூறியுள்ளார். மேலும் மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணியும் படியும், சமூக இடைவெளியை பின்பற்றும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!