தமிழகத்தில் 5 நாட்கள் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளி விடுமுறை
தமிழகத்தில் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று காரணமாக கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை முதல்வர் அறிவித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
TN TRB தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் – அரசுக்கு கோரிக்கை!
இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்ததால் பல்வேறு தளர்வுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. அதன்படி கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வருகிற பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை – மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு!
அத்துடன் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பிப்ரவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை என தொடர்ந்து விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாலும், பள்ளி ஆசிரியர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவதாலும் இந்த விடுமுறை தவிர்க்க முடியாததாக உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 23ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.