TN TRB தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் – அரசுக்கு கோரிக்கை!
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதி நடக்க இருக்கும் கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அரசுக்கு கோரிக்கை:
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அட்டவணை கடந்த மாதம் ஜனவரி 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை இம்மாதம் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியானது. இந்த இரு தேர்வுகளுக்கான அட்டவணையில் தேசியத் தகுதித் தேர்வும் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கணிதப் பாடத் தேர்வும் வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதி ஒரே நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தேர்வுகளை எழுதும் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!
இந்நிலையில் இது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் கணிதப் பாட தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அதில் பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வில் (நெட்) கணிதப் பாடத் தேர்வு பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதே நாளில் அதே கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது அனைத்து தரப்பிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை – மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு!
இதனை தொடர்ந்து ஒரே போட்டியாளர்கள் தான் தேசியத் தகுதித் தேர்விலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வாகிய கணிதப்பாடத் தேர்விழும் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்பட்டால் தேர்வர்கள் ஏதாவது ஒரு போட்டி தேர்வை மட்டும் எழுத இயலும் எனவே கணிதப் பாடத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவ்வாறு தேர்வு அட்டவணை தயாரிப்பது, முடிவுகளை வெளியிடுவது, இட ஒதுக்கீடு வழங்குவது என அனைத்திலும் ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பின்றி நடந்துகொள்வதை குறிப்பிட்டார்.