1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் – மாநில அரசு தகவல்!!
இன்று முதல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது நோய் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் நவம்பர் 1 -ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘பாரதி கண்ணம்மா’ ஹேமா மற்றும் கண்ணம்மாவின் பாச பிணைப்பு – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மேலும் வாரத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாட்கள் அரை நாட்காளாக வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஒரு நாள் விட்டு மறுநாள் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பின்படி 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4,6, 8 ஆகிய வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனிகிழமையிலும் நடைபெறும். மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் 9 முதல் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டுதல் படி பள்ளிகள் இயங்கி வருகின்றன.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான புத்தகம் – அரசாணை வெளியீடு!!
இதே போல் அனைத்து பள்ளிகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் மாணவர்கள் விருப்பமில்லாமல் கட்டயமான முறையில் பள்ளிக்கு செல்ல கூடாது. மற்றும் பெற்றோர்கள் விருப்பத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும். இதனால் மாணவர்கள் வருகை பதிவேடு கட்டாயமில்லை. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் பணிபுரியும் பணியாளர் உள்பட அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னர் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.