தமிழக கல்லூரி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான புத்தகம் – அரசாணை வெளியீடு!!

0
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான புத்தகம் - அரசாணை வெளியீடு!!
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான புத்தகம் - அரசாணை வெளியீடு!!
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான புத்தகம் – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் சார்ந்த முந்தைய ஆண்டுகளில் விடுபட்ட கல்லூரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவர்களுக்கு அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகம் வழங்க 10 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

10 லட்சம் நிதி ஒதுக்கீடு:

தமிழகத்தில் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி பெற ஏதுவாக தமிழக அரசு சார்பில் இலவச புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் உதவிகரமாக அமையும் என்ற நோக்கில் தமிழக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் சரவண விக்ரமிற்கு கிடைத்த அங்கீகாரம் – குடும்பத்தாருடன் கொண்டாட்டம்! ரசிகர்கள் வாழ்த்து!

அந்த வகையில் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவ / மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தும் விதமாக 10 லட்சம் ரூபாய் செலவில் புத்தகம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக விடுக்கப்பட்டுள்ள அரசாணையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்லூரி விடுதிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் 10 லட்சம் ரூபாய் செலவில் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (டிச.07) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முழு விவரம் இதோ!!

பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய இயக்குநர் மிகவும் பின்தங்கிய நிலையை சேர்ந்த இத்துறை சார்ந்த கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு குறித்து விழிப்புணர்வு அளிக்கும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு மகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!