தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!!

1
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் இதுவரை 823,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 12,200 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது வரை 804,239 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் ஆயிரத்திற்கு கீழ் வந்து விட்டது. இதனால் பல மாதங்களாக மூடப்பட்டு உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறையில் 18,500 தற்காலிக பணியிடங்கள் – 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை!!

அதன்படி நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் & ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட 70% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – மருத்துவத் துறை இயக்கம் அறிவிப்பு!!

இரண்டு நாட்கள் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் எழுத்துப் பூர்வமாக பெறப்பட்ட பெற்றோர்களின் முடிவுகள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் (சிஇஓ) ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் இன்று பிற்பகல் வரை பெறப்பட்ட அனைத்து முடிவுகளும் ஒன்றாக பள்ளிக்கல்வி இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்படும்.

முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் கல்லூரிகள் திறப்பு – உயர்கல்வித்துறை பரிசீலனை!!

அதில் பெறப்பட்ட முடிவுகளை வைத்து, இன்று சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் எடுக்கப்படும் இறுதி முடிவுகள் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் முதல்வர் ஆராய்ந்து பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!