1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.27 இல் பள்ளிகள் திறப்பு – நடுநிலை வகுப்புகள் செப்.20 தொடக்கம்!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு வருகிற செப்டம்பர் 27ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.20 இல் நேரடி வகுப்புகள் தொடங்குகிறது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் மாநில வாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் குறிப்பிட்ட அளவு மாணவர்களுடன் திறக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தமிழகத்தில் செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, 6 முதல் 8 வயது வரையிலான மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் செப்டம்பர் 20 முதல் 50 சதவீத திறன் கொண்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மீண்டும் தொடங்கும்.
ஆதார், பான் கார்டு இணைப்பு – அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு!
1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செப்டம்பர் 27 முதல் 50 சதவீத திறனுடன் மீண்டும் தொடங்கும். மாநில அரசு ஏற்கனவே செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகளைத் தொடங்கி உள்ளது. காலை பிரார்த்தனை மற்றும் பள்ளி கேண்டீன்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி, ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த உத்தரவு செப்டம்பர் 20 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் 200 விருந்தினர்கள் திருமணங்கள் மற்றும் திருமணம் தொடர்பான பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
செப் 27ம் தேதி வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய பந்த் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் முழு ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கொரோனா நெறிமுறையைப் பராமரிக்கவும், முகக்கவசம் அணிவது, கிருமிநாசினிகளை பயன்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. யோகா மையம் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியுடன் செப்டம்பர் 20 முதல் விலங்கு கண்காட்சிகள் அனுமதிக்கப்படும். செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.